undefined
undefined
By சேகர் ராஜதுரை

புதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள்  உன் பழைய ஞாபகங்களைத் தான் கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா?


இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்

நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன் வானியல்

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்