undefined
undefined
By சேகர் ராஜதுரை
யார்,  அவள்  யாரோ,  அவள்  யாரோ, கனாதானோ  ..
யாரோ, நிலாதானோ,  விடை  இல்லா வினாதானோ ..
வானின்  புலம்  தாண்டி,  நிலம்  தீண்டும்  மழைதானோ ..
நானும்  அவள்  இல்லை  எனில்  இங்கே  பிழைதானோ
உன் மார்மீதும்  தோள்மீதும்  நான்  தூங்கினேன்
உயிர்   இங்கேயே   போகட்டும்  என்றேங்கினேன் 
கரைகளே  இல்லா  நதி  ஒரே  ஒரு  ரதி ..!!

ஓர்  ஆகாய  தூரம்  நான்  போகின்ற  போதும்
என்  பக்கத்தில்  நிற்பாள்  அவள்
நான்  வீழ்கின்ற  நேரம்,  பொன்  கை  ரெண்டும்  நீளும்
தன்  கக்கத்தில்  வைப்பாள்   அவள்
நான்  காலை  பனி,   நீ  புல்லின்  நுனி
நான்  விழாமல்  நீ  தாங்கினாய்
நான்  கேளா  ஒலி,   நீ  தானே  மொழி
என்  ஓசைக்கு  பொருளாகிறாய் 

யார்,  அவள்  யாரோ,  அவள்  யாரோ, கனாதானோ  ..
யாரோ, நிலாதானோ,  விடை  இல்லா வினாதானோ ..

நான்  தூங்காத  போதும்  -  என்   துன்பத்தின் போதும்
என்  அன்னை  போல்  காத்தாய்  என்னை
பொன் வானெங்கும்  நீயே  விண்  மீனாகின்றாயே   
நான்  அண்ணாந்து  பார்பேன்  உன்னை
நான்  கேட்கும்  வரம்,  என்  வாழ்நாள் தவம்
உன்  அன்பன்றி  வேறேதடி 
உன் பாராமுகம்  நீ  காட்டும்  கணம்
நான்  கூறாமல்  சாவேனடி .. 

யார்,  அவள்  யாரோ,  அவள்  யாரோ, கனாதானோ  ..
யாரோ, நிலாதானோ,  விடை  இல்லா வினாதானோ .. 


Movie  - Muppoluthum Un Karpanaikal
Lyrics  - Thaamarai
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்