undefined
undefined
By சேகர் ராஜதுரை
நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.


படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்


கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது


மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று.


அருகில் நீ இருந்த போது
என்னையே கேட்டுக் கொண்டேன்
“நான் யார்?” என்று....
இங்கிருந்து நீ
போய் விட்ட பிறகு
இவர்கள் என்னைக் கேட்டார்கள்
“நீ யார்?” என்று!
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்