By சேகர் ராஜதுரை
யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,

அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்,
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்,

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
ஆன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

படம்        -    அன்பே சிவம்
வரிகள்   -    வைரமுத்து






0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்