By சேகர் ராஜதுரை
தீயின் திறப்புவிழா
உன் புன்னகை

நீ
வாசத்தை உற்பத்தி
செய்யும் நாணத்
தொழிற்சாலை

குனிந்து நகரும்
கோபுரம்

நிமிர்ந்த நிலவே
கண்ணுக்குத் தெரியாத பூக்கள்
உனக்கு வாசமானது
கண்ணுக்குத் தெரியும் கனிகள் 
உனக்கு வசீகரமானது

மலராயுதம் நீ

நீ முகத்தை துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டியிருந்தது
சில வானவில்கள்

அருவிகளை என்
கண்களுக்குத் தந்து விட்டு 
எங்கே நீ
குளிக்கச் சென்று விட்டாய்?
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்