undefined
undefined
By சேகர் ராஜதுரை

மனிதர்கள்
மலர்களைப் பறிப்பது இயல்பு
மலர்களே
மனதினைப் பறிப்பது - இந்தக்
காதலில் மட்டும்தான்
உன்னைப் போல....

undefined
undefined
By சேகர் ராஜதுரை

எனக்குத் தெரிந்து
இந்த உலகில்....
மலர்களின் இதழ்கள்தான்
மென்மையானவை..... இதமானவை.....
2010 ஜனவரி 16 வரைக்கும்..
அதற்குப் பிறகு
அவளின் இதழ்கள்தான்
அன்றுதான்
அவள் எனக்கு
முத்தமிட்ட முதல் நாள்....
undefined
undefined
By சேகர் ராஜதுரை
நீ
சுற்றுலா போனபோது
பேராதனைப் பூங்கா
பேரானந்தம் கொண்டது
சுற்றுலாத் தளமொன்று
தன்னைச்
சுற்றிப் பார்க்குதென்று....

கண்மணி உன்னை

கண்பார்த்ததில்
கண்டிப் பூங்காவை
நானும் கண்டுகொள்ளவில்லை.....
undefined
undefined
By சேகர் ராஜதுரை

ஏன் நான்
உன்னைக் காதலிக்கிறேன்
அதற்கு என்னால்
ஆயிரம் கரணம் சொல்ல முடியும்

ஏன் நீ

என்னைக் காதலிக்கவில்லை
அதற்கு நீ
ஒரேயொரு காரணமாவது சொல்...

undefined
undefined
By சேகர் ராஜதுரை

பெண்ணே!
என் காதலை ஏற்றுக்கொள்
இல்லை
எப்படியாவது என்னைக் கொல்
உன்னால் நான்...
உயிரிழக்காமல் சாகிறேன்
உணர்வில்லாமல் வாழ்கிறேன்
காதல் அனுபவமும்
உந்தன் நினைவுகளும்
இதமாய்த்தான் இருக்கிறது
அதனால் வாழப் பிடிக்கிறது
சிலநேரம்
உந்தன் நினைவுகளும்
இரக்கமில்லா இரவுகளும் தனிமைகளும்
என்னை
இன்ச் இன்சாய் கொல்கின்றன
அதனால் வாழப் பிடிக்கவில்லை
நான் வாழவா? சாகவா?

undefined
undefined
By சேகர் ராஜதுரை
அதிகமானவர்களுக்கு
கவிதை எழுதத்தெரியும்
ஆனால் சிலருக்குத்தான்
கவிதையைத் தெரியும்
அந்தச் சிலரில்
நானும் ஒருவன்....
undefined
undefined
By சேகர் ராஜதுரை
எனக்கு
பிடித்தவைகளின் பட்டியலில்
முதலிடத்தில் இருப்பது
நீ..........

உனக்கு
பிடித்தவைகளின் பட்டியலில்
இடம் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை

உனக்கு
பிடிக்காதவைகளின் பட்டியலில்
கடைசி இடமாவது
கொடு எனக்கு...

எது எப்படியோ....
உன் பட்டியலில்
இடம் கிடைத்தால் போதும்
எனக்கு....
undefined
undefined
By சேகர் ராஜதுரை

நீ என் வாழ்க்கையின்
ஒரு பகுதியக மட்டும் இருக்கலாம்
ஆனால்.........
உன் மீது நான் வைத்திருக்கும் காதல்
என் ஆயுள் வரை இருக்கும் - ஏன்
நான் இறந்த்தாலும் இருக்கும்
என்னை எரித்தாலுமது சாம்பலாகும்
அந்த சாம்பலை......
நீரில் கரைத்தாலும் சரி
காற்றில் தூற்றினாலும் சரி
காற்றும் நீரும் இருக்கும் வரை
என் காதலும் இருக்கும்.....

undefined
undefined
By சேகர் ராஜதுரை
என்னை ஈன்றெடுத்த
என் அம்மாவுக்கு
நான் வென்றெடுப்பவையெல்லாம்
சமர்ப்பணம்

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்