By சேகர் ராஜதுரை
மிதித்து விட்டா போவது வழியில்
அவள் பாதச் சுவடு ! 

பேருந்து கம்பியைத் தடவிப் பார்க்கிறேன்  அவள் ரேகைத் தட்டுப்படுமா ?   

இந்தச் செடிக்கு காதியில் வாங்கிய கெட்டித் தேன் ஊற்றலாம், அவள் தவறாமல் அதில் பூப்பறிக்கிறாள்!  

அவள் வீட்டு வாசலைத் தோண்டினால் புதையல் நிச்சயம், அங்கே அவள் தினசரி கோலம் போடுகிறாளே !  

இதோ அவள் மறந்து போன கைக்குட்டை …, இல்லை கசங்கிய ஒரு துண்டு வானவில்!

உதட்டோரப் புன்முறுவல், அது ஐம்பெருங்காப்பியத்தின் ஆரம்ப விழா!

இரவில் விழுகிறதே வானவில், ஓ! அவள் உறக்கம் வராமல் மாடியில் உலவுகிறாளா ?

இந்தப் பூமிக்கு இவ்வளவு அழகாக ஓவியம் வரைய வருமா?, அடடா..அது அவள் பாதத் தடமா ?

அவளிடம் சொல்லுங்கள் , உனக்காக ஒருவனுக்கு அங்கே கண்கள் வழியாய் இதயம் ததும்பிக்கொண்டிருக்கிறதென்று !

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்