By சேகர் ராஜதுரை
வருகிற புத்தாண்டில்
எனக்கொன்றும்
பெரிசாய்த் தேவையில்லை
 
பேருந்துகளில் ஏறுகின்ற
மற்றும் அடிக்கடி
என் வீட்டுக்கு வருகின்ற   
பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை
ஓரிரண்டாவது குறைந்தால் போதும்...

என்னுடன்
பழகித் திரியும் நண்பர்களும்
பக்கத்து வீட்டு மாமாவும் - என்
தாத்தாவும் தமையனும்
புகைப்பதை விட்டால் போதும்....

அடுத்த ஆண்டுக்கு அது மட்டும் போதும்




0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்