By சேகர் ராஜதுரை
ஒவ்வொரு நாளும்
வார்த்தைகளெல்லாம் வந்து
வரம் கேட்கின்றன.
உன்னைப் பற்றி எழுதும்
கவிதைகளில்
ஒதுக்கி விடாமல்
தம்மை
உபயோகித்துக் கொள்ளுமாறு... 


உனக்காகச்
சீவி சிங்காரித்து
அனுப்பி வைக்கும்போது
வளமில்லாத எந்த வார்த்தையும்
வயதுக்கு வந்து விடுகிறது.
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்