By சேகர் ராஜதுரை
* சர்வேஸ்வரனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால், மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.
.................................................................................................................................................

* கடவுள் தாம் நேசிக்கிறவனைத் தண்டிக்கிறார். தம் மகனாக ஏற்றுக்கொள்ளும் எவனையும் பிரம்பால் அடிக்கிறார்.
.................................................................................................................................................


* ஒவ்வொரு மனிதனும் தன் மோகங்களால் இழுக்கப்பட்டு மருளும்போதே சோதனைகளுக்கு ஆளாகிறான்.
.................................................................................................................................................


* சோம்பேறியே! எறும்பைக் கவனி. அதன் வழிமுறைகளைப் பின்பற்றி அறிவு பெறு. அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. அதிகாரியும் இல்லை. கோடைகால ஆகாரத்திற்கு அறுவடை காலத்திலே தானியத்தைச் சேகரித்து வைக்கிறது.
.................................................................................................................................................

* ஆசைச் சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான். ஏனெனில் சோதனை முடிந்த பின் வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.
.................................................................................................................................................


* எவனாவது முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடைசியானவனாய், எவருக்கும் தொண்டனாய் இருப்பானாக.
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்