By சேகர் ராஜதுரை

இதுவரைக்கும் - நான்
எழுதிப் படித்த கவிதைகளுள்
எனக்குப் பிடித்த கவிதை
அவளின் பெயர்.....
அவளுக்குப் பெயர் வைத்தவன்
என்னை விட(ப்)
பெரிய கவிஞனா?
************

எனக்கு அவளைப் பிடிக்கும்

ஆனால்.....
என் பேனைக்கு
அவளின் பெயரைத்தான் பிடிக்கும்
************

கவிதை......

எழுதுவதை விட
அவளின்....
பெயரை எழுதுவதுதான்
எனக்கும் பிடிக்கும்
என் பேனைக்கும் பிடிக்கும்
************

அவளின்

பெயர் எழுதிவைத்த காகிதம்
மணக்கிறது.....
அகராதியில் அர்த்தம் தேடினேன்
அவளின் பெயருக்கு
அங்கே.......
"துளசி" என்றிருந்தது

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்