By சேகர் ராஜதுரை
அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !
கடைக்கண் பார்வைக்கும்
கண நேரப் புன்னகைக்கும்
அவளிடம்தான்
என்னை
அடகு வைத்தேன் !

இரண்டாம் நாளே
ஏலம் போட்டு விட்டாளே !
அவளுடைய வீட்டில்
என் பெயர்
அடிபடவேண்டுமென்று
ஆசைப்பட்டேன்...
நானே தெருவில்
அடிபடும்படி
செய்து விட்டாளே !
வீதியில் தடுமாறி
விழுந்த போது கேட்டார்கள்:
‘எது உன்னை இடறியது?’

எப்படி சொல்ல முடியும்...
எதிரே வந்த
ஒரு பெண்ணின்
புன்னகைதான் என்னை
புரட்டி விட்டதென்று !

@ தீக்குச்சிகளைத்
தேடிக் கொண்டிருக்காதீர்கள்
அவளிடம் கேளுங்கள் ....
சிரிப்பிலிருந்து
நெருப்பை உண்டாக்குவது
எப்படி என்று !

@என் கல்லறைக்கு
வரும்போதாவது
அவளைப் பார்த்து
யாராவது கேளுங்கள் .....
அந்தப் புன்னகைக்கு
அர்த்தம் என்னவென்று !
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்