By சேகர் ராஜதுரை
  • வெப்பம் :                                                                                   நீரோடு கோலம் காணா நிலைப்படியும்
    நெளிந்தாடு சேலை இல்லாத் துணிக் கொடியும்
    மலர விட்டுத்தரை உதிர்க்கும் பூச்செடியும்
    வாளியும் கிணற்றடியும்
    கைப்பிடிச் சுவரும்
    வரளுகின்றன – என்னைப் போல்
    அவளில்லா
    வெறுமையில்

    ==============================
  • வடு
    அம்மா இழுத்த சூடும்
    அப்பா இறைத்த வசவும்
    இன்னுமிருக்கின்றன –
    என்னில்
    பசுமையாய் –
    நடுமரத்தில் நம் பெயரை
    நீ செதுக்கின வடு மாதிரி
    நீயோ –
    மரம் மாதிரி
    ==============================
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்