By சேகர் ராஜதுரை
உனக்குத் தெரியுமா
கனவென்றால் என்னவென்று.....?
உன்னைக் காதலித்த பிறகுதான்
எனக்குத் தெரியும்

உன்மீது கொண்ட காதலுக்காக

என் உயிரைத்தவிர
எல்லாவற்றையும் இழந்திருக்கிறேன்
லாபமென்று அடைந்தது
உன் கனவுகளையும்    
நினைவுகளையும்
மட்டும்தான் 
 நீ ''இல்லை'' என்று சொன்னபோதே
என்னுயிரை இல்லாமல் செய்திருப்பேன்
உன் நினைவுகள் தரும் சுகத்தை
உன்னாலும் தரமுடியாது
அதனால்தான் இன்னமும் இருக்கிறேன்

உன்னைப்பற்றிய என் கனவுகள்
ஒரேமாதிரியானவையாக இருந்தாலும்
அவை என் இனிமைக்கு
உரமிடுபவையாகத்தான் இருக்கின்றன

பழகப் பழகப் பாலும் தேனும்
புளித்துப் போகலாம்
பல யுகங்கள்
நான் பழகத் துடிக்கும் நீயும்
என் மனச்சுவற்றில் பதிந்து  விட்ட 
உன் முகமும்  வரும் 
கனவுகள் புளிக்காது
.... 
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்